இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும் செப்., 8-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அங்குள்ள டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் பிரம்மாண்டமாய் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ரஹ்மான். வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தார். சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது.
மனோ, உதித் நாராயண், ஹரிச்சரண், ஜாவித் அலி, ரஞ்சித் பிரோட், நீத்தி மோகன், ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ஆகியோர் ரஹ்மானின் இசை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப்பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என இன்னிசை மழையில் நனைந்த ஒருவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்-